Monday, January 28, 2013

கவிதை பக்கம்

கவிதை பக்கம்
காலியாக சிலகாலம்
கவிதையான நிகழ்வுகளும்
குறைவான காலம்


திடீரென பள்ளிகூட அலுமினி கூட்டம் -
பழைய சினேகிதிகள் ஒவ்வொருவராய்
பேச்புக்கில் கண்டுபிடிப்பு - சபை நிறைந்தது
பேச்புக் கூட்ட பக்க உரையாடல்
பள்ளிகூட வராந்தாவாக சலசலப்பு


பலவருடத்திற்கு பிறகு புகைபடத்தில்,
அவளா இவள் ? இவளா அவள் ?
ஆறுவித்தியாச துணுக்காக
நினைவுகளும்,நிஜங்களும்..


சிரிக்க வைத்தவள்,சீண்டியவள்
சிணுங்கியவள்,கலகலத்தவள் -
ம்றுபடியும் பார்க்கையில்,
தீக்குச்சி நெருப்பென சீண்டப்பட்ட
நிகழ்வுகளும் மறைந்து போனது


காலை முதல் மாலை வரை
வாழ்க்கை முழுவதற்கும் சேர்த்து
சிரித்தது போல் சிரித்தது...
பாட நேரத்தில் ஆசிரியர் அசைவுகளை
கவனமாக கவனித்து - மதியஉணவுடன்
சேர்த்து அரைத்து சிரித்தது...


நினைவுகள் யாவும்
பள்ளி வராந்தா  ஒலியாக
உடம்பு முழுதும் பரவியது..
இக்குதுகூலம் கவிதை இல்லையெனில்
வேறு எது கவிதையாக கூடும்?

- சித்ரா
(k_chithra@yahoo.com)

நன்றி : திண்ணை (28-Jan-2013)
http://puthu.thinnai.com/?p=18076

No comments:

Post a Comment